sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கணவன், மகளை கண்டறிந்துதர கலப்புத் திருமண மனைவி புகார்

/

கணவன், மகளை கண்டறிந்துதர கலப்புத் திருமண மனைவி புகார்

கணவன், மகளை கண்டறிந்துதர கலப்புத் திருமண மனைவி புகார்

கணவன், மகளை கண்டறிந்துதர கலப்புத் திருமண மனைவி புகார்


ADDED : ஏப் 21, 2025 06:49 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனுார்: 'தனது கணவரையும், மகளையும் காணவில்லை என்றும், அவர்களை கண்டுபிடித்துத் தருமாறும் கலப்பு திருமணம் செய்த மனைவி சின்னமனுார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சின்னமனுார் அருகே உள்ள எரசக்கநாயக்கனுார் இந்திரா காலனி ராம்குமார் 32. இவரது மனைவி மாடத்தி 28.

இத்தம்பதி இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சிவன்யா 7, அனன்யா 5 என்ற 2 மகள்கள் உள்ளனர்.

ராம்குமார் மது குடித்து விட்டு வந்து, அடிக்கடி மனைவியுடன் சண்டையிடுவது வழக்கம். அதே போல கடந்த ஏப்.17 இரவு குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் மாடத்தி கோபித்துக் கொண்டு தனது இளைய மகளுடன் அதே ஊரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். திரும்பவும் இரவு 11:00 மணியளவில் மாடத்தி வீட்டிற்கு வந்து பார்த்தார்.

அப்போது தனது கணவரையும், மூத்த மகளையும் காணவில்லை. அக்கம் பக்கம் தேடியும் எங்கும் காணவில்லை. மாடத்தி சின்னமனுார் போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ. சுல்தான் பாட்சா வழக்குப் பதிந்து, மாயமான ராம்குமார், அவரது மகளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us