/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முன்று வீடுகளில் கதவுகளை உடைத்து பணம், நகை திருட்டு
/
முன்று வீடுகளில் கதவுகளை உடைத்து பணம், நகை திருட்டு
முன்று வீடுகளில் கதவுகளை உடைத்து பணம், நகை திருட்டு
முன்று வீடுகளில் கதவுகளை உடைத்து பணம், நகை திருட்டு
ADDED : ஜூன் 14, 2025 05:53 AM
தேனி: கோடாங்கிபட்டியில் அடுத்தடுத்து மூன்று வீடுகளின் கதவுகளை உடைத்து பணம், நகை, வெள்ளிப் பொருட்கள் திருட்டு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனி கோடாங்கிபட்டி திருக்குமரன் நகர் சுப்புராஜ் 60. இவரது வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த ரூ.36 ஆயிரம், ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றனர்.
இதே பகுதியில் உள்ள செந்தில்கண்ணன் 64, வீட்டின் கதவை உடைத்து ரூ.48 ஆயிரம் திருடினர். போடி பெருமாள் கோயில் தெரு சதீஸ்குமார் 42. இவரது சகோதரர் லட்சுமணபிரசாத் திருக்குமரன் நகரில் வீடு வாங்கினார். கடந்த 3 மாதங்களுக்கு முன் அமெரிக்கா சென்றார்.
இந்நிலையில் வீடு சதீஸ்குமார் பராமரிப்பில் இருந்தது. இந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 1 பவுன் தங்க மோதிரம் திருடிச் சென்றனர். பாதிக்கப்பட்ட மூவரும் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தனர்.
எஸ்.ஐ., மலரம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.