ADDED : செப் 14, 2025 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி:அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் பூபாலன் மனைவி தமிழ்ச்செல்வி 39, இவர்களது 17 வயது மகள் மூன்று நாட்களுக்கு முன்பு இரவு சாப்பிட்டுவிட்டு தாயுடன் தூங்கினார்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது மகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மகள் குறித்து தாய் தமிழ்ச்செல்வி புகாரில் க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.