sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 2 நாட்களில் 8 அடி உயர்வு

/

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 2 நாட்களில் 8 அடி உயர்வு

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 2 நாட்களில் 8 அடி உயர்வு

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 2 நாட்களில் 8 அடி உயர்வு


ADDED : டிச 15, 2024 01:17 AM

Google News

ADDED : டிச 15, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் கன மழையால் இரண்டு நாட்களில் 8 அடி உயர்ந்து நேற்று மாலை 128.65 அடியை எட்டியது.

முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி பெரியாறில் 54.2 மி.மீ., தேக்கடியில் 100 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரத்து 652 கன அடியாக அதிகரித்தது.

ஆனால் நேற்று காலை சற்று மழை குறைந்ததால் மாலை 4:00 மணிக்கு நீர்வரத்து 4400 கன அடியாக குறைந்தது. அணை நீர்மட்டம் கடந்த இரண்டு நாட்களில் 8 அடி உயர்ந்து நேற்று மாலை 4:00 மணிக்கு 128.65 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). மழை தொடர்ந்தால் நீர்மட்டம் 130 அடியை கடக்கும் வாய்ப்புள்ளது. நீர் இருப்பு 4406 மில்லியன் கன அடியாகும். தமிழகப் பகுதிக்கு 1400 கன அடி திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 126 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

விவசாயிகள் வலியுறுத்தல்


தேனி மாவட்டத்தில் கனமழையால் வைகை அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

முல்லைப் பெரியாறு, மூல வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரியாறு அணையில் இருந்து தற்போது திறக்கப்பட்டுள்ள 1400 கன அடியை நிறுத்தி, நீர்மட்டம் 136 அடிக்குமேல் உயர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us