sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சேதமடைந்த மேல்நிலை தொட்டி அகற்றுவதில் நகராட்சி அலட்சியம்

/

சேதமடைந்த மேல்நிலை தொட்டி அகற்றுவதில் நகராட்சி அலட்சியம்

சேதமடைந்த மேல்நிலை தொட்டி அகற்றுவதில் நகராட்சி அலட்சியம்

சேதமடைந்த மேல்நிலை தொட்டி அகற்றுவதில் நகராட்சி அலட்சியம்


ADDED : ஜூலை 27, 2025 12:28 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனியில் இடியும் நிலையில்உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இடிக்க நகராட்சியில் நிதி ஒதுக்கி, தீர்மானம் நிறைவேற்றி 4 மாதங்கள் ஆகியும் அதற்கான பணியை நகராட்சி துவங்கவில்லை.தேனி நகராட்சிக்கு 20வது வார்டில் கே.ஆர்.ஆர்.,நகர் 6வது தெருவில் 1982ல் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.

தொட்டி சேதம் காரணமாக கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக அந்த நீர்தேக்க தொட்டி பயன்பாடின்றி உள்ளது. அந்த தொட்டியை சுற்றி புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் தொட்டியின் துாண்கள் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது.

நகராட்சியில் 2025 ஏப்., 9ல் நடந்த நகர்மன்ற கூட்டத்தில், ரூ.2.50 லட்சம் செலவில் இந்த தொட்டியை இடித்து அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றி 3 மாதங்கள் ஆகியும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது.

தொட்டி இடிந்து விழுந்து ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் குடியிருப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us