ADDED : செப் 02, 2025 05:38 AM
தேனி : தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு ஆக.29 முதல் 31 வரை தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் குமரன் உத்தரவில் கோட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்கள், பள்ளிகளில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
இந்த நாளில் தபால்துறை பணியாளர்களின் உடல் நலத்தையும், குழு ஒருமைப்பாட்டையும் ஊக்குவிக்கும் வகையில் கோ கோ, கிரிக்கெட், கைப்பந்து போட்டிகள் நடந்தன. போட்டிகளில் அனைத்து பணியாளர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பங்கேற்ற தபால்துறை ஊழியர்கள் தேசிய விளையாட்டு தின உறுதிமொழி ஏற்றனர். தேனி கோட்டத்திற்கு உட்பட்ட சேடபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, உத்தமபாளையம் எஸ்.ஏ.பி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. மேலும், 'பிட் இந்தியா இயக்கம்' தொடர்பான விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்த தபால்துறை ஊழியர்கள் சைக்கிள் ஊர்வலங்களிலும் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.