sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

உத்தமபாளையம் பேரூராட்சியில் புதிய அலுவலக கட்டுமான பணி; நுாலக கட்டடத்தில் செயல்படும் அலுவலகம்

/

உத்தமபாளையம் பேரூராட்சியில் புதிய அலுவலக கட்டுமான பணி; நுாலக கட்டடத்தில் செயல்படும் அலுவலகம்

உத்தமபாளையம் பேரூராட்சியில் புதிய அலுவலக கட்டுமான பணி; நுாலக கட்டடத்தில் செயல்படும் அலுவலகம்

உத்தமபாளையம் பேரூராட்சியில் புதிய அலுவலக கட்டுமான பணி; நுாலக கட்டடத்தில் செயல்படும் அலுவலகம்


ADDED : மார் 16, 2025 07:00 AM

Google News

ADDED : மார் 16, 2025 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம்; உத்தமபாளையம் பேரூராட்சிக்கு ரூ.1.5 கோடியில் புதிய அலுவலக கட்டுமான பணி துவங்கியதால் வடக்கு தெருவில் உள்ள பழைய நூலக கட்டடத்தில் பேரூராட்சி அலுவலகம் மாற்றப்பட்டு நேற்று முதல் செயல்படத் துவங்கியது.

உத்தமபாளையம் தேர்வு நிலை பேரூராட்சி பழமையானது. ஆரம்பத்தில் உத்தமபாளையம் யூனியன் அலுவலகம் என்ற பெயரில் செயல்பட்டுள்ளது. 1936 ல் தற்போதுள்ள இடத்தில் புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டது. கடந்த 88 ஆண்டுகளாக இந்த கட்டடத்தில் பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

தற்போது மக்கள் தொகை பெருக்கம், அலுவலர் பணியிடங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் புதிய கட்டடம் நவீன வசதிகளுடன் கட்ட அரசு உத்தரவிட்டது.

அதன் பேரின் மூலதன நிதியின் கீழ் ரூ.1.5 கோடியில் புதிய அலுவலக கட்டடம் கட்ட டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கியது. இதனால் அலுவலகம் வடக்கு தெருவில் பழைய நூலக கட்டடத்தில் (பெரிய பள்ளிவாசல் எதிர்புறம் ) வாடகைக்கு செயல்பட துவங்கியது. பொதுமக்கள் புதிய கட்டடம் கட்டும் வரை தங்களது சேவைகளுக்கும், வரி இனங்கள் செலுத்தவும், பழைய நுாலக கட்டடத்தில் செயல்படும் அலுவலகத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என பேரூராட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us