sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

முழுமையாக இயந்திரங்கள் உதவியுடன் வேளாண் பணி செய்ய புதிய திட்டம்

/

முழுமையாக இயந்திரங்கள் உதவியுடன் வேளாண் பணி செய்ய புதிய திட்டம்

முழுமையாக இயந்திரங்கள் உதவியுடன் வேளாண் பணி செய்ய புதிய திட்டம்

முழுமையாக இயந்திரங்கள் உதவியுடன் வேளாண் பணி செய்ய புதிய திட்டம்


ADDED : மே 29, 2025 03:13 AM

Google News

ADDED : மே 29, 2025 03:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: பயிர் சாகுபடியில் முழுமையாக இயந்திரங்கள் பயன்படுத்தி சாகுபடி செய்ய சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த முறையில் உற்பத்தியாகும் மகசூலுடன் மனித சக்தியில் கிடைத்த உற்பத்தியையும் ஒப்பிட்டு பார்க்க வேளாண் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

வேளாண் பயிர் சாகுபடி பணிகளில் அதிக அளவில் இயந்திர பயன்பாடு அதிகரித்து வருகிறது. வேளாண் பணிகளில் களை எடுத்தல், நாற்று நடுதல், மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகள் மனித சக்திகளை கொண்டு மட்டும் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு இயந்திரங்கள் இருந்தாலும் மனிதர்கள் பயன்பாடு இப்பணிகளில் அதிகளவில் ஈடுபடுகின்றனர்.

எனவே இயந்திரப்பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் இயந்திரங்களை கொண்டு சோதனை முறையில் நெல், மக்காச்சோளம் தலா 500 ஏக்கரிலும் வாழை 150, நிலக்கடலை, உளுந்து தலா 200 ஏக்கர் சாகுபடி செய்ய உள்ளனர்.

இதுபற்றி வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் கூறுகையில், இயந்திர பயன்பாட்டில் சாகுபடி சோதனை முறை தேனி மாவட்டத்திலும் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் நெல் 5 ஏக்கர், மக்காச்சோளம் 8, வாழை 9, நிலக்கடலை 2, உளுந்து ஒரு ஏக்கர் சாகுபடி செய்யப்பட உள்ளது.

இதில் நிலத்தை உழுதல், நாற்றுநடுதல், களை எடுத்தல், ட்ரோன் மூலம் மருத்து தெளித்தல், இயந்திர அறுவடை செய்தல் உள்ளிட்ட அனைத்து பணிகள் முழுவதும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக (எம்.எஸ்.எம்.ஐ.,) சிறு,குறு தொழில் முனைவோர் திட்டத்தில் இணையத்தில் பதிவு செய்த வேளாண் தொழில் முனைவோர்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

பயிர் சாகுபடிக்கு இயந்திரங்களை பயன்படுத்தி உழுதல் முதல் அறுவடை வரை ஏக்கருக்கு நெல் ரூ. 27,600, மக்காச்சோளம் ரூ.20,400, வாழை ரூ.45,800, நிலக்கடலைக்கு ரூ. 23,750, உளுந்து ரூ. 13,700 செலவிடப்படும். சோதனை திடல் அமைக்க விரும்பும் விவசாயிகள் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களை அணுகலாம்.

மேலும் இந்த திடல்களில் பயிர் மகசூலும், அருகில் நடைமுறை சாகுபடியில் இதே பயிரின் மகசூலும் ஒப்பிடப்பட உள்ளது. இதன் மூலம் இயந்திர பயன்பாட்டால் குறைந்த செலவில் அதிக மகசூல் கிடைத்தால், இத்திட்டம் பற்றி தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது என்றனர்.






      Dinamalar
      Follow us