/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புத்தக திருவிழாவிற்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
/
புத்தக திருவிழாவிற்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
புத்தக திருவிழாவிற்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
புத்தக திருவிழாவிற்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
ADDED : டிச 26, 2025 05:37 AM
தேனி: பள்ளி அரையாண்டு விடுமுறை துவங்கி உள்ளதால் தேனியில் நடக்கும் புத்தக திருவிழாவிற்கு மாணவர்கள் பெற்றோர்களுடன் வருவது அதிகரித்துள்ளது.
தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 4ம் ஆண்டு புத்தக திருவிழா டிச., 21ல் துவங்கியது. தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பங்கேற்கும் இலக்கிய மன்றம், சிந்தனை அரங்கம் நடக்கிறது. பள்ளி அரையாண்டு விடுமுறை துவங்கி உள்ளதால் மாணவர்கள் பெற்றோர்களுடன் மாலை, இரவு நேரத்தில் அதிகளவில் வந்து செல்வது தொடர்கிறது. மாணவர்கள் பலரும் ஸ்டால்களில் புத்தகங்களை வாசிக்கின்றனர். பெற்றோர்களும் தங்களுக்கு பிடித்து புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.

