sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நாமமிட்டு மடிப்பிச்சை ஏந்தி  சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

/

நாமமிட்டு மடிப்பிச்சை ஏந்தி  சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

நாமமிட்டு மடிப்பிச்சை ஏந்தி  சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

நாமமிட்டு மடிப்பிச்சை ஏந்தி  சத்துணவு ஊழியர்கள் போராட்டம்


ADDED : மே 10, 2025 07:42 AM

Google News

ADDED : மே 10, 2025 07:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.6750 வழங்க வேண்டும்.

மருத்துவ காப்பீடு சலுகை, ஈமக்கிரியை செலவுத்தொகை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டித்து, பட்டை நாமமிட்டு மடிப்பிச்சை ஏந்தும் போராட்டம் நடந்தது. கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் கிருபா, தேன்மொழி முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பழகன், அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஜெயராஜ ராஜேஸ்வரன், அரசு ஊழியர் சங்கமாவட்டத் தலைவர் உடையாளி வாழ்த்திப்பேசினர். மாநில நிதிக்காப்பாளர் நுார்ஜஹான் நிறைவுரையாற்றினார். மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் சுப்புராஜ் நன்றி கூறினார். அரசு ஊழியர்கள் சங்க அலுவலத்தில் நடந்த கூட்டத்திற்கு பின் நாமம் இட்டு, மடி ஏந்தி அனைவரும் புது பஸ் ஸ்டாண்டில் உள்ள பயணிகளிடம் பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us