sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 பணியாளரை திட்டியதாக அலுவலர் மீது வழக்கு

/

 பணியாளரை திட்டியதாக அலுவலர் மீது வழக்கு

 பணியாளரை திட்டியதாக அலுவலர் மீது வழக்கு

 பணியாளரை திட்டியதாக அலுவலர் மீது வழக்கு


ADDED : ஜன 01, 2026 05:44 AM

Google News

ADDED : ஜன 01, 2026 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: கெங்குவார்பட்டி பேரூராட்சியில் தூய்மை பணி மேற்பார்வையாளர் முத்துராசு 52,வை ஜாதியை கூறி திட்டியதாக இளநிலை உதவியாளர் ராதாகிருஷ்ணன் 52, மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துராசு பேரூராட்சியில் தூய்மைப்பணி மேற்பார்வையாளராக பணி புரிந்து வருகிறார். டிச. 23 ல் பேரூராட்சி அலுவலகத்தில் இவருக்காக ஒதுக்கப்பட்ட சேர், டேபிள் தூக்கி வீசப் பட்டிருந்தது.

இது குறித்து முத்துராசு, அலுவலக்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டுள்ளார்.

இதற்கு ராதாகிருஷ்ணன், முத்துராசுவை ஜாதியை கூறி திட்டி, 'அலுவலகத்தில் என் முன்னே நீ உட்காரக்கூடாது, உள்ளே வரக்கூடாது,' என மிரட்டியுள்ளார். முத்துராசு புகாரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.-






      Dinamalar
      Follow us