நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: அரப்படித்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் பரமசிவம் 60, தனது மகனுடன் வசித்தார்.
சில ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். ஜூன் 24ல் வயிற்று வலி அதிகமானதால் தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூறினார்.
தோட்டத்திற்கு சென்று வந்தபின் மருத்துவமனை செல்லலாம் என்று மகன் சசிகுமார் சென்றுவிட்டார்.
சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்தபோது பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் இருந்த பரமசிவத்தை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். சசிகுமார் புகாரில் க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.