/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஒரு ரூபாய்க்கு ஒரு மாத இலவச அழைப்பு
/
ஒரு ரூபாய்க்கு ஒரு மாத இலவச அழைப்பு
ADDED : செப் 04, 2025 12:20 AM
தேனி:பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் ஒரு ரூபாய்க்கு ஒரு மாத இலவச அழைப்பு திட்டம் செப்., 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சார்பில் 5 ஜி தொழில்நுட்பம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது.
சுதந்திர தின சலுகையாக புதிதாக பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க்கில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாயில் சிம்கார்டு வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி தினமும் 2 ஜி.பி., இண்டர்நெட், ஒரு மாதத்திற்கு இலவச அழைப்புகள் மேற்கொள்ளலாம். இந்த திட்டம் செப்.,15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிற நெட்வொர்க்கில் இருந்து மாறும் வாடிக்கையாளர்களுக்கும் இச்சலுகை பொருந்தும். பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்றனர்.