ADDED : பிப் 23, 2024 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: தேனி வீந்திரநாத் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, மேல்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்தையா கோயில் அருகே வராகநதி கரையில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் 6 வெள்ள தடுப்பு சுவர்கள், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் இதே பகுதியில் வெள்ளத்தடுப்பு சுவருடன் படித்துறை கட்டி முடிக்கப்பட்டது.
இதனை ரவீந்திரநாத் எம்.பி., திறந்து வைத்தார். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியின் விவசாய அணி துணை செயலாளர் ரெங்கராஜ், நகர் செயலாளர் அப்துல்சமது, மாவட்ட பிரதிநிதி அன்பு பங்கேற்றனர்.