sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஓட்டுச்சாவடி விபரம் சேகரித்து அறிக்கை தர மண்டல அலுவலர்களுக்கு உத்தரவு

/

ஓட்டுச்சாவடி விபரம் சேகரித்து அறிக்கை தர மண்டல அலுவலர்களுக்கு உத்தரவு

ஓட்டுச்சாவடி விபரம் சேகரித்து அறிக்கை தர மண்டல அலுவலர்களுக்கு உத்தரவு

ஓட்டுச்சாவடி விபரம் சேகரித்து அறிக்கை தர மண்டல அலுவலர்களுக்கு உத்தரவு


ADDED : மார் 05, 2024 04:17 AM

Google News

ADDED : மார் 05, 2024 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவு நடக்க உள்ள ஓட்டுச்சாவடி விபரங்களை சேகரித்து அறிக்கை தாக்கல் செய்ய மண்டல அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதிகளில் 1225 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. இதனை 127 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மண்டலத்திலும் 10 முதல் 14 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.

தேர்தல் மண்டல அலுவலர்கள் தேர்வு செய்து தேர்தல் ஆணையம் சட்டசபை தொகுதி வாரியாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து ஓட்டுச்சாவடிகளில் உள்ள அடிப்படை வசதிகள், குடிநீர் வசதி, மின்வசதி, கட்டடங்கள் உறுதி தன்மை, ரேம் வசதி, கடந்த காலங்களில் ஓட்டுச்சாவடிகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்துள்ளதா, ஓட்டுப்பதிவின் போது அரசில் குறுக்கீடு ஏற்பட்டு பதற்றமான சூழல் உருவாகி உள்ளதாக உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தயார் செய்து ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அடிப்படை வசதிகள், மின்வசதியை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருவாதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us