sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இயற்கை முறையில் ஏலக்காய் சாகுபடி; ஸ்பைசஸ் வாரியம் மீண்டும் முயற்சி

/

இயற்கை முறையில் ஏலக்காய் சாகுபடி; ஸ்பைசஸ் வாரியம் மீண்டும் முயற்சி

இயற்கை முறையில் ஏலக்காய் சாகுபடி; ஸ்பைசஸ் வாரியம் மீண்டும் முயற்சி

இயற்கை முறையில் ஏலக்காய் சாகுபடி; ஸ்பைசஸ் வாரியம் மீண்டும் முயற்சி


ADDED : நவ 11, 2024 12:34 AM

Google News

ADDED : நவ 11, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: இயற்கை வேளாண் முறையில் ஏலக்காய் சாகுபடியை ஊக்குவிக்க ஸ்பைசஸ் வாரியம் மீண்டும் முயற்சிகளை துவக்க உள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்கவும் முடிவு செய்துள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது. சாகுபடியில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் சவுதி அரேபியாவிற்கு சில ஆண்டுகளுக்கு முன் இந்திய ஏலக்காய் கொண்டு சென்ற கன்டெய்னர்களை துறைமுகத்தில் நிறுத்தி வைத்து, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக பூச்சிகொல்லி மருந்துகள் இருப்பதாகக் கூறி அப்படியே திருப்பி அனுப்பி விட்டனர்.

இந்த நிலையை தவிர்த்து ஏற்றுமதியை அதிகரிக்க ஸ்பைசஸ் வாரியம் 2 ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்து, மாதந்தோறும் கடைசி சனிக்கிழமைகளில் இயற்கை முறையில் அதாவது ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தாமல் சாகுபடி செய்த ஏலக்காய்களுக்கு சிறப்பு ஏலம் நடத்தியது. மொத்தமுள்ள உள்ள 15 நிறுவனங்களில் 4 நிறுவனங்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்றன.

முதல் ஏலத்தில் எஸ்.ஐ.சி.சி., நிறுவனம் 2 ஆயிரத்து 297 கிலோவை விற்பனைக்கு வைத்தது.

அடுத்து மாஸ் நிறுவனம் 15 ஆயிரம் கிலோவை விற்பனைக்கு வைத்தது.

சராசரி விலையாக கிலோவிற்கு ரூ.ஆயிரத்து 125 க்கு போனது. இந்த ஏலக்காய் அனைத்தும் ஸ்பைசஸ் வாரியத்தின் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு, இயற்கை முறையிலும், அனுமதிக்கப்பட்ட அளவு பூச்சிக் கொல்லி பயன்படுத்தியது என்று சான்றளிக்கப்பட்டு இருந்தது. இதற்கு வியாபாரிகளிடம் வரவேற்பு இல்லை.

இயற்கை முறையில் மகசூல் குறைவு, எதிர்பார்த்த விலை இல்லாததால், அதிர்ச்சியடைந்த விவசாயிகள் இயற்கை சாகுபடியை கைவிட்டனர்.

இதனால் வேறு வழியின்றி இயற்கை முறையில் சாகுபடி செய்த ஏலக்காய்க்கு நடத்தி வந்த சிறப்பு ஏலத்தையும் வாரியம் ரத்து செய்தது.

இந்நிலையில் மத்திய வர்த்தக அமைச்சகம் 10 சதவீதம் பரப்பிலாவது இயற்கை முறையில் ஏலக்காய் சாகுபடி இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி ஏல விவசாயிகளுக்கு ஸ்பைசஸ் வாரியம் சில சலுகைகளை வழங்கி இயற்கை முறையில் ஏல சாகுபடியை துவக்கும் பணிகளையும் முன்னெடுத்துள்ளது.






      Dinamalar
      Follow us