sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கழிவுநீர் தேங்குவதை தடுக்காததால் ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு

/

கழிவுநீர் தேங்குவதை தடுக்காததால் ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு

கழிவுநீர் தேங்குவதை தடுக்காததால் ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு

கழிவுநீர் தேங்குவதை தடுக்காததால் ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு


ADDED : அக் 01, 2024 05:52 AM

Google News

ADDED : அக் 01, 2024 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம் ஜி.கல்லுப்பட்டியில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்குவதை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை வார்டு மக்கள் பூட்டினர்.

ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி 12 வது வார்டில் நூற்றுக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். ஊராட்சி பகுதியில் பிற வார்டுகளிலிருந்து மழைக்காலங்களில் கழிவுநீர் 12 வது வார்டு வினோபாநகர் பள்ளிவாசல் தெருவில் தேங்குகிறது. கழிவுநீர் வீடுகளுக்குள் புகுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர். ஆனாலும் நடவடிக்கை இல்லை. இதனால் நேற்று முன்தினம் வினோபாநகர் மக்கள் மதியம் 12:00 மணிக்கு ஊராட்சி அலுவலகத்தை பூட்டினர்.

வார்டுக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என கதவில் நோட்டீஸ் ஒட்டினர். ஊராட்சி தலைவர் மகேஸ்வரி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் மாலை 3:00 மணிக்கு பூட்டிய பூட்டு திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று ஒன்றிய அலுவலகம் உதவி செயற்பொறியாளர் சேகரன் சாக்கடை கட்டுவதற்கு அளவீடுகள் செய்தார்.

--






      Dinamalar
      Follow us