sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சுருளி அருவியில் வாகன நிறுத்தம் ஏற்படுத்த பயணிகள் வலியுறுத்தல்

/

சுருளி அருவியில் வாகன நிறுத்தம் ஏற்படுத்த பயணிகள் வலியுறுத்தல்

சுருளி அருவியில் வாகன நிறுத்தம் ஏற்படுத்த பயணிகள் வலியுறுத்தல்

சுருளி அருவியில் வாகன நிறுத்தம் ஏற்படுத்த பயணிகள் வலியுறுத்தல்


ADDED : பிப் 09, 2025 05:37 AM

Google News

ADDED : பிப் 09, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: சுருளி அருவியில் தினமும் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் வருவதால், வாகன நிறுத்தம் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுருளி அருவியில் குளிப்பதற்கென தினமும் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா தலமாக மட்டுமில்லாமல் ஆன்மிக தலமாகவும் இருப்பதாலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

விசேஷ நாட்கள் குறிப்பாக தமிழ் புத்தாண்டு, பொங்கல், தை, ஆடிமற்றும் மகாளய அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள்.

வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான வாகனங்களை நிறுத்த இடமின்றி ரோடுகளின் பக்கவாட்டில் நிறுத்துகின்றனர்.

இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. நுழைவு கட்டணம் என்ற பெயரில் சுருளிப்பட்டி ஊராட்சியும், வனத்துறையும் கட்டணம் வசூலிக்கிறது.

ஆனால் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித வசதியையும் செய்து தருவதில்லை. மற்ற வசதிகள் இல்லாவிட்டாலும், வாகனங்களை நிறுத்த இடம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே சுருளி அருவியில் வாகன நிறுத்துமிடம் ஒன்றை அமைக்க ஊராட்சி, வனத்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us