/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குரங்கணி டாப் ஸ்டேஷன் மலைப்பாதையில் தொடர் மழையால் 5 இடங்களில் மண் சரிவு போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி
/
குரங்கணி டாப் ஸ்டேஷன் மலைப்பாதையில் தொடர் மழையால் 5 இடங்களில் மண் சரிவு போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி
குரங்கணி டாப் ஸ்டேஷன் மலைப்பாதையில் தொடர் மழையால் 5 இடங்களில் மண் சரிவு போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி
குரங்கணி டாப் ஸ்டேஷன் மலைப்பாதையில் தொடர் மழையால் 5 இடங்களில் மண் சரிவு போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி
ADDED : நவ 04, 2024 03:50 AM

போடி: தொடர் கன மழையால் குரங்கணி டாப் ஸ்டேஷன் செல்லும் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு பாறையில் உருண்டு ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. இதனால் சுற்றுலாப்பயணிகள் அவதிக்குள்ளாயினர்.
தேனி மாவட்டம் போடி ஒன்றியம் கொட்டக்குடி ஊராட்சிக்குட்பட்ட கடைக்கோடி கிராமமாக தமிழக, கேரளா எல்லைப் பகுதியில் உள்ளது டாப் ஸ்டேஷன். போடியில் இருந்து 18 கி.மீ., துாரம் குரங்கணி வரை ரோடு வசதி உள்ளது.
அங்கிருந்து 22 கி.மீ., துாரத்தில் டாப் ஸ்டேஷன் உள்ளது. குரங்கணி, கொட்டக்குடி, முட்டம், முதுவாக்குடி, சென்ட்ரல், டாப் ஸ்டேஷன் உள்ளிட்ட மலைக்கிராமங்களும் உள்ளன.
குரங்கணியில் இருந்து டாப் ஸ்டேஷன் செல்லும் ரோட்டில் சாம்பலாறு வரை ஜீப், கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் வகையில் ரோடு வசதி உள்ளது.
இந்த ரோட்டில் தினமும் விவசாயிகள் மட்டும் இன்றி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.
சமீபத்தில் பெய்யும் தொடர் மழையால் குரங்கணி மலைப்பாதையில் 5 இடங்களில் நேற்று மண்சரிவு ஏற்பட்டது. மரங்கள் வேருடன் சாய்ந்தும், பாறைகள் உருண்டும் ரோட்டில் விழுந்தன. இதனால் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியாதபடி ஐந்து மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மண் அள்ளும் இயந்திரம் மூலம் பாறை, மரங்களை அகற்றிய பின் போக்குவரத்து சீரானது. இதனால் சுற்றுலாப்பயணிகள் அவதிக்குள்ளாயினர்.