ADDED : ஜூலை 25, 2025 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் கேட் வசதி இருந்தும் காவலர் இல்லாததால் திறந்த வெளியாக உள்ளது.
இதனால் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால் நடைகள் மருத்துவமனை வளாக பகுதியில் தாராளமாக உலா வருகின்றன. சில நேரங்களில் மாடுகள் தங்களுக்குள் சண்டையிடும் போது நோயாளிகள் மிரண்டு ஓடி அச்சம் அடைந்து வருகின்றனர். வளாகத்தில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தவும், காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

