sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

'எக்ஸ்ரே' எடுத்த நோயாளிகள் பரிந்துரை பெற முடியாமல் தவிப்பு

/

'எக்ஸ்ரே' எடுத்த நோயாளிகள் பரிந்துரை பெற முடியாமல் தவிப்பு

'எக்ஸ்ரே' எடுத்த நோயாளிகள் பரிந்துரை பெற முடியாமல் தவிப்பு

'எக்ஸ்ரே' எடுத்த நோயாளிகள் பரிந்துரை பெற முடியாமல் தவிப்பு


ADDED : ஏப் 09, 2025 06:30 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் எம்.டி., படித்த டாக்டர்கள் இல்லாததால் -

எக்ஸ்ரே எடுத்த சர்க்கரை நோயாளிகள் யாரிடம் பரிந்துரை பெறுவது என தெரியாமல் திணறி வருகின்றனர்.

அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சிகிச்சைக்கு வரும் சர்க்கரை நோயாளிகள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர், முடக்கு வாதம் பாதிப்பு, கேன்சர் நோயாளிகள் ஆகியோரை எக்ஸ் ரே எடுக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டது. இந்த நோயாளிகளுக்கு எளிதாக காசநோய் பரவும் வாய்ப்பு உள்ளதால் எக்ஸ்ரே எடுத்து உறுதி செய்ய கூறப்பட்டுள்ளது. எனவே,100 நாட்களுக்குள் எக்ஸ்ரே எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள் மற்றும் நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் கனிசமான எண்ணிக்கையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், எக்ஸ்ரே எடுத்தவர்களுக்கு காசநோய் பாதிப்பு உள்ளதா என்பதை எம்.டி. டாக்டர்கள் தான் உறுதி செய்ய வேண்டும். கம்பம் பகுதியில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் எம்.டி. டாக்டர்கள் பணியில் இல்லை. உத்தமபாளையம் மருத்துவமனையில் கடந்த வாரம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் எக்ஸ் ரே எடுத்தவர்களின் எக்ஸ் ரே பிலிமை பார்த்து பரிந்துரை செய்ய டாக்டர் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us