ADDED : ஜன 10, 2024 12:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தமிழ்நாடு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர் நலச்சங்க கூட்டமைப்பின் சார்பில், பழனிச்செட்டிபட்டி போக்குவரத்து கழக டிப்போ முன் தி.மு.க., அரசை கண்டித்தும், தொழிற்சங்க வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநிலத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மண்டல துணைப் பொதுச் செயலாளர் பாலையா முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜெயபாண்டி, செயலாளர் கஸ்பர்ராஜ் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., தொ.மு.ச., அண்ணா தொழிலாளர் பேரவையின் ஓய்வு பெற்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.

