ADDED : பிப் 11, 2026 07:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் உள்ள குறைகளை நீக்க வேண்டும், 70 வயது பூர்தியான ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவமணி, பொருளாளர் மாரிமுத்து,மாநில துணைத்தலைவர் ராமமூர்த்தி, நிர்வாகிகள் பழனியப்பன், சடையாண்டி, துரைராஜ், ராமசந்திரன், கோபாலகிருஷ்ணன், ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

