sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குளத்தில் குப்பை கொட்டி எரிப்பதால் மக்கள் சிரமம்

/

குளத்தில் குப்பை கொட்டி எரிப்பதால் மக்கள் சிரமம்

குளத்தில் குப்பை கொட்டி எரிப்பதால் மக்கள் சிரமம்

குளத்தில் குப்பை கொட்டி எரிப்பதால் மக்கள் சிரமம்


ADDED : ஜூன் 21, 2025 11:58 PM

Google News

ADDED : ஜூன் 21, 2025 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: போடி ஒன்றியம், மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சி வலையபட்டி மந்தைக்குளத்தில் குவிந்துள்ள குப்பையில் சமூக விரோதிகள் தீ வைப்பதால் ஏற்படும் நச்சுப்புகையால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சியில் வலையபட்டி உள்ளது. இங்குள்ள மந்தைக்குளத்தில் மக்கள் குப்பைகளை கொட்டிச் செல்கின்றனர்.

குளத்தில் குவிந்த குப்பையை அகற்ற மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது.

இதனால் குப்பை குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. சமூக விரோதிகள் அவ்வப்போது குப்பையில் தீ வைப்பதால் அதிகளவில் நச்சுப்புகை பரவுகிறது. இதனால் மந்தைக்குளத்திற்கு எதிரே உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பெருமாள் கூறுகையில்,' மந்தைக்குளத்தில் கொட்டப்படும் குப்பையை அகற்ற ஊராட்சியிலும்,போடி பி.டி.ஓ.,விடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. நச்சுப்புகையால் அருகே குடியிருப்பு மக்களுக்கு உடல் நலம் பாதிக்கிறது.

குப்பையை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.






      Dinamalar
      Follow us