ADDED : ஜன 02, 2025 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பொது மக்களின் ஆதார் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் பெரியகுளம்தலைமை தபால் நிலையத்தில் ஆதார் சிறப்பு முகாம் காலை 8:00 முதல் இரவு 8:00 மணிவரை ஜன.2 (இன்று) முதல் ஜன.4 வரை நடக்க உள்ளது.
இங்கு  பெயர் திருத்தம்,முகவரி மாற்றம்,பிறந்த தேதி திருத்தம், அலைபேசி எண் திருத்தம், குழந்தைகளுக்கானபுதிய ஆதார் பதிவு, குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் பதிவு உள்ளிட்ட   சேவைகள் வழங்கப்படும். பொது மக்கள் இச் சேவையை பயன்படுத்தி பயன் பெறலாம் என தேனி தபால்கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார்.

