sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு - நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியை தாண்டியது

/

பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு - நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியை தாண்டியது

பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு - நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியை தாண்டியது

பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு - நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியை தாண்டியது


ADDED : மே 28, 2025 02:28 AM

Google News

ADDED : மே 28, 2025 02:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 119.65 அடியை எட்டியது. அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியை தாண்டியது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்புப் பகுதியில் கொட்டிவருகிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி தேக்கடியில் 105.6 மி.மீ., பெரியாறில் 101.6 மி.மீ., மழை பதிவானது.

இதனால் 1648 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 5200 கன அடியாக அதிகரித்தது. நேற்று மழை மேலும் தீவிரமடைந்து நீர்வரத்து மாலை நிலவரப்படி 7800 கன அடியாக அதிகரித்தது. இதனால் 115.65 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் நான்கு அடி உயர்ந்து நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி 119.65 அடியை எட்டியது (மொத்த உயரம் 152 அடி).

தமிழகப் பகுதிக்கு குடிநீருக்கு 100 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 2285 மில்லியன் கன அடியாகும். தொடர் மழையால் நீர்மட்டம் 120 அடியை கடக்கும் வாய்ப்புள்ளது.

இதனிடையே அணையில் முகாமிட்டுள்ள தமிழக நீர்வளத் துறையினர் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை நீர்மட்ட அளவை கண்காணித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us