sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஆண் குழந்தைக்காக கொழுந்தியாளை பலாத்காரம் செய்தவர் மீது போக்சோ

/

ஆண் குழந்தைக்காக கொழுந்தியாளை பலாத்காரம் செய்தவர் மீது போக்சோ

ஆண் குழந்தைக்காக கொழுந்தியாளை பலாத்காரம் செய்தவர் மீது போக்சோ

ஆண் குழந்தைக்காக கொழுந்தியாளை பலாத்காரம் செய்தவர் மீது போக்சோ


ADDED : ஏப் 29, 2025 05:46 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு: மயிலாடும்பாறை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 30 வயது வாலிபருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

வாலிபரின் மனைவிக்கு 16 வயதில் தங்கையும், தம்பியும் உள்ளனர். இந்நிலையில் மனைவியின் 16 வயது தங்கை மீது ஆசை கொண்டவர், அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று, தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதாகவும் ஆண் குழந்தை வேண்டும் என்பதால் மனைவியின் தங்கையை திருமணம் செய்து வைக்க வற்புறுத்தி உள்ளார்.

மனைவியின் பெற்றோர்கள் அவரை திட்டி அனுப்பினர்.

இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட மனைவியின் தங்கையை வாலிபர் சிகிச்சைக்காக தேனியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அங்கிருந்து மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு தங்கும் விடுதியில் அறை எடுத்து சிறுமியுடன் தங்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இரு நாட்களுக்குப் பின் சிறுமியை மீண்டும் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இது குறித்து யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று சிறுமியை கண்டித்துள்ளார். நடந்த நிகழ்வுகள் குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், வாலிபர் மீது மயிலாடும்பாறை போலீசில் புகார் கொடுத்தனர். மனைவியின் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து தலைமறைவாக உள்ளவரை போக்சோவில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us