ADDED : பிப் 05, 2025 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதியவர் தற்கொலை
தேனி: கோட்டூர் இமானுவேல் தெரு பாண்டி 65. மதுக்குடிப்பழக்கம் இருந்ததால் உடல் நலம் பாதித்து அவதிப்பட்டு வந்தார். பிப்.,3ல் விஷம் குடித்தார். மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லுாரிக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மகன் கிருஷ்ணமூர்த்தி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
டாஸ்மாக் தகராறில் முதியவர் காயம்
தேனி: அரண்மனைப்புதுார் முல்லைநகர் அழகுமலை 73, ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியர். இவர், இவரது உறவினர்கள் மகாமுனி, மாதவன், சந்தனராஜ் ஆகிய நால்வரும் இணைந்து தேனி புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள டாஸ்மாக்கில் மது அருந்தினர். அங்கு ஏற்பட்ட தகராறில் அழகுமலையை மாதவன் தாக்கினர். இவரது புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.