sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போலீஸ் செய்திகள்...

/

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...


ADDED : ஜன 31, 2024 06:37 AM

Google News

ADDED : ஜன 31, 2024 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கம்பம்: கச்சையம்மன் கோயில் தெரு முருகேசன். இவரது மனைவி ஈஸ்வரி. இத்தம்பதியின் மகன் காமேஸ்வரன் 32. இவர் தனியார் நிறுவன சேல்ஸ்மேன். நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். வீட்டில் தாய் தந்தை அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவரது அண்ணன் ராமனும் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மனைவியை தாக்கியவர் மீது வழக்கு

பெரியகுளம்: பெரியகுளம் முத்துவேல் நகர் முத்துசாமி 37. இவருக்கும் சருத்துபட்டி எம்.ஜி.ஆர்., தெருவைச் சேர்ந்த ஜெயராமன் மகள் அழகுகொடிக்கும் 27, 2014ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு தியாகு, தியாஸ்ரீ என மகன், மகள் உள்ளனர். முத்துசாமி அவரது குடும்பத்தினர் பேச்சைக் கேட்டு அழகுகொடியை தாக்கி காயம் ஏற்படுத்தினார். அழகுகொடி புகாரில் முத்துசாமி மீது பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் சருத்துப்பட்டி பஸ் நிலையம் அருகே வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த அழகுகொடியை, முத்துசாமி அவதூறாக பேசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். தென்கரை போலீசார், முத்துசாமி மீது மீண்டும் கொலை மிரட்டல் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.--

கொலை மிரட்டல்: வாலிபர் கைது


போடி: வினோபாஜி காலனி கருப்பசாமி கோயில் தெரு ஒண்டிவீரன் 75. மரக்கடை காவலாளி. இவர் நடந்து செல்லும் போது சிவன் கோயில் தெருவை சேர்ந்த அருண்குமார் 25, பின்பக்கமாக மோதினார். ஒண்டிவீரன் சத்தம் போட்டு, தட்டிக்கேட்டார். ஆத்திரம் அடைந்த அருண்குமார், ஒண்டிவீரனை தகாத வார்த்தையால் பேசி, மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து இடது காது அருகே கிழித்து காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். போடி தாலுகா போலீசார் அருண்குமாரை கைது செய்தனர்.

எஸ்.பி., அலுவலகத்தில் தற்கொலை முயற்சி


தேனி: சஞ்சய்காந்தி 7 வது தெரு பட்டதாரி இளைஞர் அரவிந்தன் 28. இவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, ஒரு நபர் ரூ.5.65 லட்சம் பணம் மோசடி செய்ததாக தேனி எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தார். பின் அலுவலகம் முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டனர். தேனி வி.ஏ.ஓ., ஜீவா புகாரில், அரவிந்தன் மீது தேனி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

விபத்தில் கொத்தனார் பலி


தேனி: பத்தரகாளிபுரம் வைரமுத்து 45, ஈஸ்வரன் 54. இருவரும் கொத்தனார் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் டூவீலரில் காக்கிவாடன்பட்டி பிரிவு அருகில் வந்த போது அடையாளம் தெரியாத ஆட்டோ, டூவீலர் மீது மோதி நிற்காமல் சென்றது. அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். சிகிச்சை பலனின்றி ஈஸ்வரன் இறந்தார். வைரமுத்து புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

மனைவியை தாக்கியவர் மீது வழக்கு

பெரியகுளம்: பெரியகுளம் முத்துவேல் நகர் முத்துசாமி 37. இவருக்கும் சருத்துபட்டி எம்.ஜி.ஆர்., தெருவைச் சேர்ந்த ஜெயராமன் மகள் அழகுகொடிக்கும் 27, 2014ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு தியாகு, தியாஸ்ரீ என மகன், மகள் உள்ளனர். முத்துசாமி அவரது குடும்பத்தினர் பேச்சைக் கேட்டு அழகுகொடியை தாக்கி காயம் ஏற்படுத்தினார். அழகுகொடி புகாரில் முத்துசாமி மீது பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் சருத்துப்பட்டி பஸ் நிலையம் அருகே வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த அழகுகொடியை, முத்துசாமி அவதூறாக பேசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். தென்கரை போலீசார், முத்துசாமி மீது மீண்டும் கொலை மிரட்டல் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.--

கொலை மிரட்டல்: வாலிபர் கைது

போடி: வினோபாஜி காலனி கருப்பசாமி கோயில் தெரு ஒண்டிவீரன் 75. மரக்கடை காவலாளி. இவர் நடந்து செல்லும் போது சிவன் கோயில் தெருவை சேர்ந்த அருண்குமார் 25, பின்பக்கமாக மோதினார். ஒண்டிவீரன் சத்தம் போட்டு, தட்டிக்கேட்டார். ஆத்திரம் அடைந்த அருண்குமார், ஒண்டிவீரனை தகாத வார்த்தையால் பேசி, மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து இடது காது அருகே கிழித்து காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். போடி தாலுகா போலீசார் அருண்குமாரை கைது செய்தனர்.

எஸ்.பி., அலுவலகத்தில் தற்கொலை முயற்சி

தேனி: சஞ்சய்காந்தி 7வது தெரு பட்டதாரி இளைஞர் அரவிந்தன் 28. இவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, ஒரு நபர் ரூ.5.65 லட்சம் பணம் மோசடி செய்ததாகதேனி எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தார். பின் அலுவலகம் முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டனர். தேனி வி.ஏ.ஓ., ஜீவா புகாரில், அரவிந்தன் மீது தேனி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us