sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போலீஸ் செய்திகள்...

/

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...


ADDED : மே 13, 2025 07:51 AM

Google News

ADDED : மே 13, 2025 07:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விபத்தில் கால் முறிவு

தேனி: ரோசனம்பட்டி அருகே ஆசாரிபட்டி நடுத்தெரு கண்ணன் 42. மாற்றுத்திறனாளி. இவர் நான்கு சக்கரங்கள் பொறுத்திய டூவீலரில்மார்க்கெட்டிங் பணியாற்றி வருகிறார். மதுரை தேனி மெயின் ரோட்டில் மே 10ல் சிட்கோ தொழிற்சாலை பிரிவு அருகே சென்றார். பின்னால் வந்த கார் டூவீலர் பின்புறமாக மோதிவிட்டு, நிற்காமல் சென்றது. இதில் மாற்றுத்திறனாளிகண்ணனின் கால் முறிந்து காயங்கள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர் புகாரில், தேனி எஸ்.ஐ., முருகேசன் கார் ஓட்டிய நபர் மீது வழக்குப்பதிந்துவிசாரிக்கின்றார்.

பஸ் மீது ஆட்டோ மோதி 8 பேர் காயம்

தேனி: மதுராபுரி காளியம்மன் கோயில் தெரு அருண்குமார் 28. பெரியகுளம் ரோடு தனியார் பஸ் நிறுவனத்தின் டிரைவர். பெரியகுளம் மெயின் ரோடுபெட்ரோல் பங்க் அருகே மே 10ல் இரவு ஓட்டி வந்து, பங்கிற்கு செல்ல ரோட்டின் கிழக்குப் புறமாக பஸ்சை திருப்பினார். அப்போது அமல்ராஜ்தேனி நோக்கி வந்த ஆட்டோ, பஸ் மீது மோதியதில், ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோவில் பயணித்த அருணாச்சலம்,பாக்கியலட்சுமி, சித்ரா, பிரித்திவிராஜன், மாரியம்மாள், வீரமணிகண்டன், சக்திவேல், ஆட்டோ டிரைவர் அமல்ராஜ் உட்பட 8 பேர் காயமடைந்தனர். அனைவரும்தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டனர். தேனி போலீசார் குறித்து விசாரிக்கின்றனர்

ஜவுளிக்கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து

தேனி: சுக்குவாடன்பட்டி மேற்குத்தெரு பாபு 43. ஜவுளிக்கடை உரிமையாளர். இவரது கடைக்கு டூவீலரில் கடந்த மே 9ல் மதியம் சென்று கொண்டிருந்தார்.அப்போது பாபுவின் டூவீலருக்கு பின்னால் சென்ற, சுக்குவாடன்பட்டி டிரைவர் செல்வபாண்டி ஓட்டிச் சென்ற ஆட்டோ, டூவீலரில் மோதி விபத்து நடந்தது.

இதில் பாதிக்கப்பட்ட பாபு, சத்தமிட்டு கடைக்கு சென்று அமர்ந்திருந்தார்.

அப்போது கடைக்கு முன் ஆட்டோவை நிறுத்திய டிரைவர் செல்வபாண்டி,ஆட்டோவில் இருந்த கத்தியை எடுத்து, பாபுவிடம் தகராறில் ஈடுபட்டார்.

பின் இடது கன்னத்தில் குத்தி காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். பாதிக்கப்பட்ட பாபு சிகிச்சையில் உள்ளார். அல்லிநகரம் எஸ்.ஐ., கண்ணன், ஆட்டோர் டிரைவர் செல்வபாண்டி மீது வழக்குப் பதிந்துவிசாரிக்கின்றனர்.

ஆட்டோ கார் விபத்து: இருவர் காயம்

தேனி: போடி மீனாட்சிபுரம் வேல்முருகன் 49. இவர் மே 11ல் தனது ஆட்டோவில் தேனிக்கு சென்றுவிட்டு மீண்டும் மீனாட்சிபுரம் திரும்பினார். கோடாங்கிபட்டி கனராவங்கி அருகே சென்றபோது, சென்னை ராமாபுரம் அம்மாள்நகர் பாலாஜி ஓட்டி வந்த கார், ஆட்டோ மீது மோதி விபத்து நடந்தது. இதில் ஆட்டோவில் பயணித்தவேல்முருகன், கார் டிரைவர் பாலாஜி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. வேல்முருகன் காயமடைந்து தேனி மருத்துவக்கல்லுாரி அனுமதிக்கப்பட்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கிறார்.

டூவீலர் கார் விபத்தில் வாலிபர் பலி

தேனி: இடுக்கி மாவட்டம் பாம்புபாறை ரெகுநாத் 29. தேனி சகோதரர் ரோபின்குமாருடன் 29, டூவீலரில் வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை திருவிழாவிற்குவந்தனர்.

அப்போது திண்டுக்கல் பைபாஸ் ரோடு பண்ணை அருகே சின்னமனுார் கார்த்திக் 32, ஓட்டி வந்த கார் மோதி விபத்து நடந்தது. இதில் ரோபின்குமார்இடதுபுறமாகவும், ரெகுநாத் வலது புறமாக கீழே விழுந்தனர். கார் ரெகுநாத் தலையில் ஏறி, சம்பவ இடத்தில் தலை நசுங்கி உயிரிழந்தார். வீரபாண்டி போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி பலி

கடமலைக்குண்டு: கோவில்பாறை விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் பவுன்த்தாய் 70, இவர் மகன் சந்திரசேகரின் தோட்டத்திற்கு தினமும் சென்று வருவார். சந்திரசேகர் தோட்டம் அருகே அவரது சித்தப்பா தோட்டமும் உள்ளது.

நேற்று முன் தினம் தோட்டத்துக்கு சென்ற பவுன்த்தாய் அவரது சித்தப்பா தோட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்து இறந்துள்ளார். இது குறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சந்திரசேகர் புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us