sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போலீஸ் செய்திகள்...

/

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...


ADDED : ஜூலை 10, 2025 03:25 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: போடேந்திரபுரம் பாண்டிசெல்வம் 42. மூன்று ஆண்டுகளுக்கு முன் இவரின் வீட்டில் அதேப் பகுதியை சேர்ந்த அப்பு, சோலை தீ வைத்தனர். வீரபாண்டி போலீசில் வழக்குப்பதிந்து விசாரணை நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. இந் நிலையில் அப்பு, சோலை ஆகிய இருவர் மூன்று ஆண்டுகளாக வெளியூரில் வசித்து வந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் போடேந்திரபுரத்திற்கு வந்தனர். இருவரும் இணைந்து பாண்டிசெல்வத்தை அசிங்கமாக பேசி தகராறு செய்தனர். பாண்டிச்செல்வம் தனது சகலை செல்லையாவுடன் டூவீலரில் சென்ற போது, அப்பு டூவீலரை வழிமறித்து, கீழே தள்ளி கத்தியால் தாக்கினார். தகராறை விலக்கிவிட வந்த பெண்ணை, சோலை கையை கடித்து காயத்தை ஏற்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட பாண்டிச்செல்வம் புகாரில் வீரபாண்டி போலீசார் அப்பு, சோலை ஆகிய இருவர் மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இப்பிரச்னையில் போடேந்திரபுரம் கிழக்குத்தெரு சோலை 55, புகாரில், பாண்டிசெல்வம், கிருபாகரன், அன்னம்மாள், பரமேஸ்வரி, செல்லையா, காளீஸ்வரி, ஜெயபிரகாஷ் ஆகிய 7 பேர் வீட்டை உடைத்து ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசியை எடுத்து சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us