sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : செப் 22, 2025 03:45 AM

Google News

ADDED : செப் 22, 2025 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தந்தையை தாக்கிய மகன், மருமகள் தேனி: பாரஸ்ட் ரோடு செல்வம் 54. இவரது மகன் முத்துராஜா. இவர் மது குடித்து விட்டு சொத்து, நகை கேட்டு செல்வத்திடம் பிரச்னை செய்து வந்தார். இந்நிலையில் முத்துராஜா, அவரது மனைவி ஹேமலதா இணைந்து சில நாட்களுக்கு முன் செல்வத்தை தாக்கினர். காயமடைந்தவர் செல்வம், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் ரூ.22 ஆயிரத்து 500, ரூ.40 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை எடுத்துச் சென்றனர். கட்டுமான பணிகளுக்கு வைத்திருந்த கிரானைட் கற்களை உடைத்துச் சென்றனர். செல்வம் புகாரில் முத்துராஜா, அவரது மனைவி ஹேமலதா மீது தேனி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

குடும்ப தகராறு: ஐவர் மீது வழக்கு தேனி: பழனிசெட்டிபட்டி ஆர்.எம்.டி.சி., காலனி நிரஞ்சனாதேவி 28. இவருக்கும் திருவண்ணாமலை நல்லவன்பாளையம் பாலஜிக்கும் 2019ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது நிரஞ்சனாதேவி குடும்பத்தினர் 100 பவுன் தங்க நகை, ரூ.10 லட்சம் வழங்கினர். இது தவிர பாலாஜி மலோசியாவிற்கு வேலைக்கு செல்ல ரூ.5 லட்சம் வழங்கினர். இவர்களுக்கு மகள் உள்ளார். இந்நிலையில் பாலாஜி கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழகி வந்தார். இதனை பாலாஜியின் தந்தை பழனி, தாயார் சாந்தி, உறவினர் மகேஷ் ஆகியோரிடம் நிரஞ்சனாதேவி கூறினார். அவர்களும் நிரஞ்சனாவை திட்டினர். இதனால் அவர் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். சில நாட்களுக்கு முன் திருவண்ணாமலையில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்ற போது பாலாஜி, மனைவியை தாக்கினார். பாதிக்கப்பட்ட மனைவி புகாரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் கணவர் உட்பட ஐவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

செயின் திருட்டு தேனி: அல்லிநகரம் மச்சால் தெரு நாகலட்சுமி. இவர் வீரபாண்டி திருவிழாவில் அக்னிசட்டி எடுத்தார். அப்போது இவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் திருடு போனது. உறவினரது அலைபேசியில் இருந்த வீடியோவில் அறிமுகம் இல்லாத நபர் நாகலட்சுமியை பின் தொடர்ந்து வருவது பதிவாகி உள்ளது. நகையை கண்டறிந்து தர வேண்டும் என எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். எஸ்.பி., உத்தரவில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்தில் கணவன், மனைவி காயம் தேனி: கண்டமனுார் அரண்மனைத்தெரு கார்த்திகேயன் 50, கடை வைத்துள்ளார். இவரது மனைவி மணிமொழி 46. ஆண்டிபட்டியில் ஒரு கல்லுாரியில் பணிபுரிகிறார். இருவரும் பழனிசெட்டிபட்டியில் டூவீலரில் சென்றனர். இவர்கள் டூவீலர் மீது மற்றொரு டூவீலர் மோதியது. காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us