ADDED : மார் 30, 2025 07:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூதாட்டி காயம்
தேனி: கோட்டூர் அம்பேத்கர் தெரு பார்வதி 60. இவரது மகன் பாரத் 38. அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரிகிறார். இவரை பார்த்து விட்டு பார்வதி வீடு திரும்பினர். ரோட்டோரமாக நடந்து சென்ற பார்வதி மீது தேவாரம் நாடார் வடக்கு தெரு சதீஸ்குமார் ஓட்டி சென்ற டூவீலர் மோதியது. விபத்தில் காயமடைந்த மூதாட்டி சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பாரத் புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
த.வெ.க.,வினர் மீது வழக்கு
தேனி: தேனி நகர்பகுதியில் பெரியகுளம் ரோட்டில் அனுமதியின்றி பிளக்ஸ் போர்டுகள் வைத்த நகர பொறுப்பாளர் ஜெயந்த் மீது தேனி போலீசார் வழக்கு பதிந்தனர்.