sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ரவுடிகளை பிடிக்க சென்ற போலீஸ்காரருக்கு தர்ம அடி: காலில் கடித்து, போனை பறித்து துரத்தினர்

/

ரவுடிகளை பிடிக்க சென்ற போலீஸ்காரருக்கு தர்ம அடி: காலில் கடித்து, போனை பறித்து துரத்தினர்

ரவுடிகளை பிடிக்க சென்ற போலீஸ்காரருக்கு தர்ம அடி: காலில் கடித்து, போனை பறித்து துரத்தினர்

ரவுடிகளை பிடிக்க சென்ற போலீஸ்காரருக்கு தர்ம அடி: காலில் கடித்து, போனை பறித்து துரத்தினர்


ADDED : அக் 28, 2025 12:04 AM

Google News

ADDED : அக் 28, 2025 12:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட ரவுடிகளை பிடிக்கச் சென்ற போலீஸ்காரரை சரமாரியாக தாக்கி, காலில் கடித்து, அவரது போனை பறித்து துரத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி முனீஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் யுவன்சங்கர். இவரது நண்பர்கள் வானவராயன், சூரியபிரகாஷ், தினேஷ், சரவணன், கோபாலகிருஷ்ணன் மற்றும் இருவர்.

ரவுடிகளான இவர்கள் மீது தென்கரை போலீஸ் ஸ்டேஷனில் அடிதடி வழக்கு நிலுவையில் உள்ளதால், நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. அவர்களை பிடிக்க தென்கரை தனிப்படை போலீஸ் ஏட்டு சரவணன், 48, சிறப்பு எஸ்.ஐ., திருப்பதிராஜா, 50, தனித்தனி டூ - வீலரில் சென்றனர்.

தேனி பைபாஸ் ரோடு சருத்துப்பட்டி பிரிவு, திருமணம் மண்டபம் அருகே யுவன்சங்கர் உட்பட அனைவரும் மது குடித்து நடனம் ஆடியபடி போதையில் இருந்தனர்.

ஏட்டு சரவணன், 'ஏன் இப்படி பைபாஸ் ரோட்டில் மது குடிக்கிறீர்கள்?' என கேட்டு, பிடிவாரன்ட் குறித்து தெரிவித்தார்.

யுவன்சங்கர் உள்ளிட்ட ஆறு பேரும் சரவணனை அவதுாறாக பேசினர். அவர்கள் செயலை, சரவணன் மொபைல் போனில் வீடியோ எடுத்தார். இதில் ஆத்திரமடைந்தவர்கள், சரவணனை சரமாரியாக தாக்கினர். இதில் ஒருவர், சரவணனின் இடது காலை கடித்துள்ளார்.

கத்தியை காட்டி மிரட்டி, சரவணன் வீடியோ எடுத்த மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை பறித்தனர். 'இனி எங்க ஏரியாவுக்குள் வந்தால் கொல்லாமல் விடமாட்டோம்' என, மிரட்டி உள்ளனர்.

தகவலறிந்த தென்கரை போலீசார் சரவணனை மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். யுவன்சங்கரை கைது செய்த போலீசார், தப்பிய மற்றவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us