/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஒட்டப்பட்ட போஸ்டர்
/
ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஒட்டப்பட்ட போஸ்டர்
ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஒட்டப்பட்ட போஸ்டர்
ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஒட்டப்பட்ட போஸ்டர்
ADDED : ஆக 04, 2025 12:31 AM

ஆண்டிபட்டி; தேனி ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் நேற்று முன்தினம் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் தி.மு.க.,வைச் சேர்ந்த தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் மேடையில் திட்டிக் கொண்டனர்.
தேனி கலெக்டர் ரஞ்ஜீத்சிங் முன்னிலையில் நடந்த இச்சம்பவம் பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆண்டிபட்டி நகர் பகுதியில் தேனி எம்.பி.,க்கு ஆதரவாக தி.மு.க., நிர்வாகிகள் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.
ஆண்டிபட்டி கிழக்கு, மேற்கு ஒன்றியம், பேரூர் கழகம் என குறிப்பிட்டுள்ள அந்த போஸ்டரில், '25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியில் ஈடுபடும் தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வனை ஒருமையில் பேசி அவமதித்த ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், கட்சியினரை மதிக்காத அவர் மீது தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தி.மு.க., எம்.எல்.ஏ., வை கண்டித்து தி.மு.க.,வினரே போஸ்டர் ஒட்டிய விவகாரம் ஆண்டிபட்டி தி.மு.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போஸ்டர் ஒட்டியது யார், தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் தான் ஒட்டி இருக்கிறார்களா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.