/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அணைகளில் மின் உற்பத்திக்காக ஆய்வு நடத்த மின்வாரியம் திட்டம்
/
அணைகளில் மின் உற்பத்திக்காக ஆய்வு நடத்த மின்வாரியம் திட்டம்
அணைகளில் மின் உற்பத்திக்காக ஆய்வு நடத்த மின்வாரியம் திட்டம்
அணைகளில் மின் உற்பத்திக்காக ஆய்வு நடத்த மின்வாரியம் திட்டம்
ADDED : பிப் 05, 2024 12:17 AM
கம்பம் : தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இருக்கும் தண்ணீரை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் வாய்ப்புக்கள் குறித்து ஆய்வு நடத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மின் உற்பத்தியில் நீர், நிலக்கரி, அணு, காற்றாலை உள்ளிட்ட பல வழிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. பெருகி வரும் மக்களின் தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீரை எடுத்து 4 ஜெனரேட்டர்கள் மூலம் 170 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இரவங்கலாறு அணையில் இருந்து தண்ணீரை எடுத்து ஒரு ஜெனரேட்டர் மூலம் 35 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இது தவிர முல்லைப் பெரியாற்றில் குருவனூத்து பாலம், குள்ளப்பகவுண்டன்பட்டி, வைகை அணை போன்ற இடங்களில் மைக்ரோ மின் நிலையங்கள் மூலம் குறைந்த மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.
தற்போது இந்த இடங்களை தவிர்த்து சண்முகா நதி அணை 52.5 அடி , மஞ்சளாறு அணை 57 அடி, சோத்துப்பாறை அணை 126 அடி கொள்ளளவு கொண்டது.
இந்த 3 அணைப் பகுதிகளிலும் மின் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி மின்வாரியம் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. வைகை அணையில் உள்ளதை போன்று அமைக்கலாமா அல்லது கூடுதல் மெகாவாட் மின் உற்பத்திக்கு சாத்தியக் கூறுகள் உள்ளதா என்பதைப் பற்றிய ஆய்வு விரைவில் துவங்க உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

