sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம்

/

திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம்

திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம்

திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம்


ADDED : மார் 23, 2025 04:30 AM

Google News

ADDED : மார் 23, 2025 04:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி அரண்மனைப்புதுாரில் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி முடிக்கப்பட்டு இரு மாதங்களுக்கு மேலாக பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.

மாவட்டத்தில் 41 ஆரம்ப சுகாதார நிலையங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவை ஊரக பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உதவியாக உள்ளன. அரண்மனைப்புதுார் ஊராட்சிக்குட்பட்டு முல்லை நகர் அரசு அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பில் கடந்தாண்டு புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணி துவங்கியது.

இரு மாதங்களுக்கு முன் பணிகள் முடிவடைந்தன. ஆனால், இதுவரை இந்த சுகாதார நிலையம் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்த நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால் முல்லை நகர், சத்திரப்பட்டி, அரண்மனைப்புதுார் பகுதி பொதுமக்கள் பயனடைவர்.

இது பற்றி சுகாதாரத்துறை அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்த சுகாதார நிலையத்திற்கு இதுவரை மருந்துகள், மருத்துவர்கள் ஒதுக்கீடு செய்யவில்லை. அமைச்சர் திறந்து வைப்பதற்காக காத்திருக்கிறோம். விரைவில் பயன்பாட்டிற்கு வரும்,' என்றார்.






      Dinamalar
      Follow us