/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டாக்டர், நர்ஸ் இன்றி பயன்பாட்டிற்கு வராத ஆரம்ப சுகாதார நிலையம்
/
டாக்டர், நர்ஸ் இன்றி பயன்பாட்டிற்கு வராத ஆரம்ப சுகாதார நிலையம்
டாக்டர், நர்ஸ் இன்றி பயன்பாட்டிற்கு வராத ஆரம்ப சுகாதார நிலையம்
டாக்டர், நர்ஸ் இன்றி பயன்பாட்டிற்கு வராத ஆரம்ப சுகாதார நிலையம்
ADDED : ஆக 02, 2025 12:51 AM
சின்னமனூர்: சின்னமனூரில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டாக்டர், நர்ஸ் நியமிக்காததால் புதிய கட்டடம் மூன்று ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது-.
சின்னமனூரில் நகர்ப்புற சுகாதார நிலையத்திற்கு கருங்கட்டான்குளத்தில் புதிய கட்டடம் கட்டி 3 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் புதிய கட்டடம் இன்னமும் பயன்பாட்டிற்கு வரப்படாமல் பூட்டியே வைத்துள்ளனர்.
இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், ' கட்டடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால்ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான டாக்டர், நர்சு பணியிடங்கள் அனுமதிக்கப்படவில்லை. - எனவே சுகாதார நிலையம் திறந்து பயன்பாட்டிற்கு அனுமதிப்பதில் சிக்கல் உள்ளது,'என்கின்றனர்.
லட்சக்கணக்கில் பணம் செலவழித்து கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

