/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குமுளி மலைப்பாதையில் தனியார் பஸ் பிரேக் டவுன் - 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு
/
குமுளி மலைப்பாதையில் தனியார் பஸ் பிரேக் டவுன் - 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு
குமுளி மலைப்பாதையில் தனியார் பஸ் பிரேக் டவுன் - 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு
குமுளி மலைப்பாதையில் தனியார் பஸ் பிரேக் டவுன் - 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு
ADDED : செப் 08, 2025 06:13 AM
கூடலுார் : குமுளி மலைப் பாதையில் தனியார் பஸ் பிரேக் டவுன் ஆனதால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குமுளி மலைப் பாதையில் பழைய போலீஸ் சோதனை சாவடி அருகே குமுளியில் இருந்து லோயர்கேம்ப் நோக்கி வந்த தனியார் பஸ் நேற்று இரவு 7:00 மணிக்கு 'பிரேக் டவுன்' ஆனது.
இதனால் வாகனங்கள் கடந்து செல்ல முடியவில்லை. குமுளியில் இருந்து சென்னை, நாகர்கோயில், திருநெல்வேலி, செங்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட நீண்ட தூரத்திற்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் செல்ல முடியவில்லை. 2 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் பிரேக் டவுன் ஆன பஸ்சை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு 9:30 மணி வரை சீராகவில்லை. இதனால் தொலை துாரத்திற்கு செல்லும் பயணிகள் ஏராளமானோர் பாதிக்கப் பட்டனர்.