ADDED : ஜூலை 24, 2025 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுரியில் ஆக.,2ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பி.இ., டிப்ளமோ, ஐ.டி.ஐ., இதர கல்வி தகுதி உடையவர்களும் பங்கேற்கலாம். பங்கேற்போர் கல்விச்சான்றிதழ்கள் நகல், ஆதார் நகல் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்கலாம். பங்கேற்போர் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

