ADDED : செப் 07, 2026 09:22 PM
கம்பம் செப் 8
உத்தமபாளையம் வெள்ளாளப் பெருமக்கள் சங்கம் சார்பில் வ.
உ. சி பிறந்த நாள் விழா,அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா, பேரவை 19ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. விழாவிற்கு தலைவர் முத்து விநாயகம் தலைமை வகித்தார். துணை தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மகளிர் குழு சார்பில் பால்குடம் எடுக்கும் எடுத்தனர். நிகழ்ச்சிக்கு கம்பம் மத்திய சங்க தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. பிளஸ் 2 தேர்வில் 600 க்கு 539 மதிப்பெண் பெற்ற சாரு தர்ஷினிக்கு ரூ.5 ஆயிரம், லோஷனா ரூ. 4 ஆயிரம், பிருத்திகா ரூ.3 ஆயிரம் பரிசு பெற்றனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஷர்ஷனா ரூ.3500, திவ்யதர்ஷினி ரூ.2500, அஸ்வின் கண்ணா ரூ.2 ஆயிரம் பரிசு பெற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 9 மாணவர்களுக்கு தலா ரூ. ஆயிரம் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
