/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பி.சி.,பட்டி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பொதுமக்கள்
/
பி.சி.,பட்டி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பொதுமக்கள்
பி.சி.,பட்டி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பொதுமக்கள்
பி.சி.,பட்டி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பொதுமக்கள்
ADDED : ஏப் 13, 2025 05:34 AM

தேனி : பொதுமக்களை மிரட்டும் நபரை கைது செய்ய கோரி பழனிசெட்டிபட்டி போலீஸ் ஸ்டேஷனை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பள்ளப்பட்டி ஊர் நாட்டாண்மை லட்சுமணன். இவர் தலைமையில் பொது மக்கள் நேற்று பழனிசெட்டிபட்டி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அவர்கள் போலீசாரிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த பொங்கல் அன்று எங்கள் ஊரைச் சேர்ந்த உதயராஜாவை,அதேப்பகுதியை சேர்ந்த தினேஸ்வரன் அரிவாளால் வெட்டி விரல் துண்டானது போலீசார் கைது செய்தனர். பின் ஜாமினில் வெளி வந்து புகார் அளித்தவர்களை மிரட்டினார். சமீபத்தில் கிருஷ்ணசாமி, ஜெகதீஸ்வரன், மவுனிகாவை ஆயுதத்தால் தாக்கினார். இதனால் ஊர்பொது மக்கள் அவர்களது வீட்டை முற்றுகையிட்டு பிடித்து, தினேஸ்வரனை எஸ்.ஐ.,யிடம் ஒப்படைத்தோம். இப் பிரச்னையில் போலீசார் 9 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர். தினேஸ்வரன், அவரது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக எங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என தெரிவித்திருந்தனர். இதனை பெற்று தேனி இன்ஸ்பெக்டர் ஜவஹர், எஸ்.ஐ., ஜீவானந்தம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் கலைந்து சென்றனர்.

