sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

முத்திரையிடாத தராசு பயன்பாட்டால் எடை குறைவு: பொதுமக்கள் ஏமாற்றம்

/

முத்திரையிடாத தராசு பயன்பாட்டால் எடை குறைவு: பொதுமக்கள் ஏமாற்றம்

முத்திரையிடாத தராசு பயன்பாட்டால் எடை குறைவு: பொதுமக்கள் ஏமாற்றம்

முத்திரையிடாத தராசு பயன்பாட்டால் எடை குறைவு: பொதுமக்கள் ஏமாற்றம்


ADDED : பிப் 01, 2025 05:40 AM

Google News

ADDED : பிப் 01, 2025 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி வாரச்சந்தை, தினசரி மார்க்கெட், சிலமலை வாரச்சந்தையில் முத்திரையிடாத தராசுகளை பயன் படுத்துவதால் பொருட்களின் எடை குறைவாக உள்ளதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.

போடியில் வாரந்தோறும் ஞாயிற்று கிழமை நடக்கும் வாரச்சந்தை, பரமசிவன் கோயில் ரோட்டில் உள்ள தினசரி மார்க்கெட், சிலமலையில் ஞாயிறு தோறும் நடக்கும் வாரச்சந்தையில் ஏராளமான வியாபாரிகள் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இவர்களிடம் பெரும்பாலும் முத்திரை இடப்படாத காலாவதி தராசுகள் உள்ளன.

அவற்றை பயன்படுத்துவதால் எடை குறைவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதற்கு என போடியில் தனி அலுவலகம், அதிகாரிகள் இருந்தும் முத்திரை இடாத தராசுகளை அதிகாரிகள் ஆய்வு செய்வது இல்லை.

முறையாக ஆய்வு செய்து தராசுகளை முத்திரையிட மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us