sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

புரட்டாசி நான்காம் சனி வார விழா பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை

/

புரட்டாசி நான்காம் சனி வார விழா பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை

புரட்டாசி நான்காம் சனி வார விழா பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை

புரட்டாசி நான்காம் சனி வார விழா பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை


ADDED : அக் 13, 2024 05:36 AM

Google News

ADDED : அக் 13, 2024 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை நான்காம் வார்த்தை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மூலவர் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன், திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்திலும், உற்ஸவர்

கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நான்காம் வாரம் என்பதால் பெருத்தேவி தாயார் கஜலட்சுமி அலங்காரத்தில் காட்சியளித்தார். பெரியகுளம் தென்கரை கோபாலகிருஷ்ணன் கோயிலில் குழந்தை வடிவிலான கிருஷ்ணர் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். பெரியகுளம் பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு சாத்திய ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். பெரியகுளம் தென்கரை நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர், ராதை மலர் அலங்காரத்தில் காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வடகரை கோதண்டராமர் கோயிலில் ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.

ஆண்டிபட்டி:

ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை முதல் பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் பெருமாளை வழிபட்டுச் சென்றனர். கதலி நரசிங்கபெருமாள், பரிவார தெய்வங்களான சக்கரத்தாழ்வார் விநாயகர், கருடாழ்வார், காலபைரவர், ஆஞ்சநேயர், நவக்கிரகம் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

ஆண்டிபட்டி மேற்கு ஓடை தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு 21 வகையான அபிஷேகங்கள் நடந்தது. மலர் அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சக்கம்பட்டி கிழக்குத்தெரு ராஜா, மந்திரி வகையறா சார்பில் சக்கம்பட்டியில் உள்ள மருதகாளியம்மன் கோயில், பஞ்சமுக விநாயகர் கோயில், மங்கள விநாயகர் கோயில், ராஜவிநாயகர் கோயில் உட்பட முக்கிய இடங்களில் பெருமாள் குறித்த பஜனை பாடல்கள் பாடி ஊர்வலம் சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

--






      Dinamalar
      Follow us