sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெரியாறு அணையில் மழை: உயருது நீர்மட்டம்

/

பெரியாறு அணையில் மழை: உயருது நீர்மட்டம்

பெரியாறு அணையில் மழை: உயருது நீர்மட்டம்

பெரியாறு அணையில் மழை: உயருது நீர்மட்டம்


ADDED : ஜூலை 24, 2025 12:29 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் பெய்த மழையால் மீண்டும் நீர்மட்டம் உயருகிறது.

கேரளாவில் மே 23ல் துவங்கிய தென்மேற்குப் பருவமழை பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் துவக்கத்திலேயே கூடுதலாக பெய்தது. அப்போது 114 அடியாக இருந்த நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து ஜூன் 1ல் 130 அடியைக் கடந்தது. அதன்பின் மழை குறைந்து நீர்மட்டமும் குறைய துவங்கியது.

இரண்டாவது முறையாக பெய்த மழையால் நீர்மட்டம் மேலும் உயர்ந்து ஜூன் 28ல் 136 அடியைக் கடந்தது. அதன்பின் மீண்டும் மழை குறைந்து நீர்மட்டம் 129.80 அடியானது.

இந்நிலையில் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் மழை பெய்ய துவங்கியுள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 2031 கன அடியாக இருந்தது.

இதனால் நீர்மட்டமும் சற்று உயர்ந்து 130.10 அடியை எட்டியது. (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு 1867 கன அடி திறக்கப் பட்டுள்ளது.

நீர் இருப்பு 4720 மில்லியன் கனஅடியாகும். நேற்று பகல் முழுவதும் மேகமூட்டத்துடன் அவ்வப்போது மழை பெய்ததால் மீண்டும் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது. தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்யத்தில் 4 ஜெனரேட்டர்களில் 168 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us