sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெரியாறு அணையில் மழை நீர்வரத்து அதிகரிப்பு

/

பெரியாறு அணையில் மழை நீர்வரத்து அதிகரிப்பு

பெரியாறு அணையில் மழை நீர்வரத்து அதிகரிப்பு

பெரியாறு அணையில் மழை நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : ஜன 21, 2025 03:30 AM

Google News

ADDED : ஜன 21, 2025 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் மழையால் நீர்வரத்து 1247 கன அடியாக அதிகரித்தது.

முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதியான தேக்கடியில் 17.8 மி.மீ., பெரியாறில் 13.2 மி.மீ., மழை பதிவானது. இதனால் 100 கன அடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 1247 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 122.10 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக 667 கன அடி திறக்கப்பட்டுள்ளது.

நீர் இருப்பு 3043 மில்லியன் கன அடியாகும். நேற்று பகல் முழுவதும் மேகமூட்டத்துடன் அவ்வப்போது நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மழையை தொடர்ந்து நீர்மட்டம் உயர வேண்டும் என கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் 60 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us