sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்காக வைகை அணையில் மீண்டும் நீர் திறப்பு

/

மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்காக வைகை அணையில் மீண்டும் நீர் திறப்பு

மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்காக வைகை அணையில் மீண்டும் நீர் திறப்பு

மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்காக வைகை அணையில் மீண்டும் நீர் திறப்பு


ADDED : டிச 12, 2024 02:31 AM

Google News

ADDED : டிச 12, 2024 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி:மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து கால்வாய் வழியாக முறைப்பாசன அடிப்படையில் மீண்டும் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் இருபோக பாசன நிலங்களுக்கு ஜூலை 3, திருமங்கலம் பிரதான கால்வாய் ஒருபோக பாசன நிலங்களுக்கு செப். 15ல் வைகை அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது.

கடந்த சில வாரங்களாக முறைப்பாசனம் நடைமுறையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து டிச.7ல் கால்வாய் வழியாக நிறுத்தப்பட்ட நீர், நேற்று காலை வினாடிக்கு 1130 கன அடி வீதம், மீண்டும் நீர்திறந்து விடப்பட்டது.

மதுரை, தேனி, ஆண்டிபட்டி,- சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வழக்கம் போல் வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேறுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 49.34 அடியாக இருந்தது(மொத்த உயரம் 71 அடி). அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 803 கன அடி.






      Dinamalar
      Follow us