UPDATED : செப் 01, 2026 08:08 PM
ADDED : செப் 01, 2026 08:03 PM
அ நிறம் | அளவு
தேனி:மாவட்டத்தில் முதலாம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் துவங்கி உள்ளது.
அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வள மையத்தில் தேனி வட்டாரல் உள்ள அரசுப்பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டி நடந்தது. போட்டிகளை சி.இ.ஓ., முருகன் துவக்கி வைத்தார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் மோகன் முன்னிலை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் மனோரஞ்சிதம், சிறப்பு ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.
