/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம், சின்னமனுாரில் போலீஸ் 'சிசிடிவி' கேமராக்கள் பழுது எஸ்.பி. நடவடிக்கை தேவை
/
கம்பம், சின்னமனுாரில் போலீஸ் 'சிசிடிவி' கேமராக்கள் பழுது எஸ்.பி. நடவடிக்கை தேவை
கம்பம், சின்னமனுாரில் போலீஸ் 'சிசிடிவி' கேமராக்கள் பழுது எஸ்.பி. நடவடிக்கை தேவை
கம்பம், சின்னமனுாரில் போலீஸ் 'சிசிடிவி' கேமராக்கள் பழுது எஸ்.பி. நடவடிக்கை தேவை
ADDED : நவ 10, 2024 06:06 AM
கம்பம், : கம்பம், சின்னமனுாரில் போலீசாரால் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பெரும்பாலும் பழுதடைந்துள்ளது. அதனை சீரமைக்க எஸ்.பி. சிவபிரசாத் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமீப காலங்களில் சிசிடிவி கேமராக்களின் பயன்பாடு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி வருகிறது. குறிப்பாக கொலை, கொள்ளை, திருட்டு வழக்குகளின் புலனாய்வுக்கு பெரிதும் உதவி வருகிறது.
அனைத்து வழக்குகளிலும் போலீசாருக்கு கை கொடுப்பது சிசிடிவி கேமராக்களாகும். எனவே கடைக்காரர்கள், குடியிருப்புகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கம்பம், சின்னமனூர் நகரங்களில் மெயின் ரோடு, கம்பமெட்டு ரோடு, பார்க் ரோடு சந்திப்பு, சின்னமனூரில் சீப்பாலக் கோட்டை ரோடு, மெயின்ரோடு, மார்க்கையன்கோட்டை ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்களை போலீசார் பொருத்தி உள்ளனர்.
ஆனால் ஒராண்டிற்கும் மேலாக பெரும்பாலான சிசி டிவி கேமராக்கள் செயல்படவில்லை.
கம்பம், சின்னமனூர் போலீசார் சிசிடிவி கேமராக்கள் பற்றி கவலைப்படுவதில்லை. காரணம் பெரும்பாலான கடைக்காரர்கள் சிசிடிவி பொருத்தி இருப்பதால் அதை பயன்படுத்தி கொள்ளலாம் என நினைக்கின்றனர்.
போலீசாரை பொறுத்தவரை ஏதாவது பெரிய சம்பவங்கள் நடக்கும் போது தான், சிசிடிவி கேமராக்கள் நினைவிற்கு வருகிறது. மற்ற நேரங்களில் அந்த கேமராக்கள் பற்றி கண்டுகொள்வதில்லை, கம்பம், சின்னமனூர் நகரங்களில் பழுதடைந்த சிசிடிவி கேமராக்களை பழுது நீக்கி, பயன்பாட்டிற்கு கொண்டுவர எஸ்.பி. சிவபிரசாத் நடவடிக்கை எடுக்க வேண்டும்.