sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை

/

துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை

துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை

துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை


ADDED : மே 01, 2025 07:06 AM

Google News

ADDED : மே 01, 2025 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் வேலை செய்யும் துப்புரவு பணியாளர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சர்க்கரை, ரத்த அழுத்தம் பார்க்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என துப்பரவு பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'நம்ம ஊரு சூப்பரு' என்ற திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் கடந்தாண்டு மே 18 ல் நடந்தது. அந்த முகாம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்றது.முகாமில் துாய்மை பணியாளர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், உயரம், எடை, இதயநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேல் சிகிச்சைக்கான பரிந்துரைகளும் செய்யப்பட்டது.

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடத்தப்பட்டது. மேலும் துப்புரவு பணியாளர்களுக்கு மருந்துவ காப்பீட்டு அட்டையும் வழங்கப்பட்டது. சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்களை மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பதிவு செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்தாண்டிற்கான முகாம் இன்னமும் நடைபெறவில்லை. ஊராட்சி,பேரூராட்சி , நகராட்சிகளிலும் துப்பரவு பணியாளர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த மக்கள் நல்வாழ்வு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us